மாவட்ட செய்திகள்
தேர்வு கட்டணம் மூன்று மடங்கு உயர்த்த பட்டதைக் கண்டித்து தஞ்சையில் மன்னர் சரபோஜி கல்லூரி மாணவ மாணவிகள் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.


பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளில் தேர்வு கட்டணம் மூன்று மடங்கு உயர்த்தப்பட்டு உள்ளது இதனை கண்டித்து தஞ்சையில் உள்ள மன்னர் சரபோஜி அரசு கல்லூரி மாணவ மாணவிகள் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி வாயிலில் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



தேர்வுக் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் இல்லையென்றால் 7 மாவட்டங்களில் உள்ள மாணவ மாணவிகளை ஒன்று திரட்டி வருகிற 13-ஆம் தேதி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் மாணவர்களும் எச்சரித்துள்ளனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
