மாவட்ட செய்திகள்
மழையில் நனைந்து கொண்டு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ மாணவிகள்.

திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக அதிகமான வெயில் வாட்டி வந்தது இதனால் மாணவ மாணவிகள் சாலையோர வியாபாரிகள் பொதுமக்கள் விவசாயிகள் என அனைவரும் பாதிக்கப்பட்டனர் இந்நிலையில் இன்று அதிகாலை முதல் பரவலாக திண்டுக்கல் சின்னாளப்பட்டி வேடசந்தூர் நத்தம் உள்ளிட்ட தாலுகா பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையில் இன்று காலை 7 மணி முதல் பலத்த காற்றுடன் நல்ல மழை பெய்து வருகிறது .


மேலும் பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவ மாணவிகள் பள்ளிகளுக்கு ஒரு சில மாணவ மாணவிகள் குடை பிடித்துக்கொண்டு மழையில் நனைந்து கொண்டு பள்ளிக்கு செல்கின்றனர் மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில் மட்டும் மழை பெய்ததால் பள்ளி கல்லூரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் விடுமுறை விடவில்லை இதன் காரணமாக இன்று திண்டுக்கல் நத்தம் வேடசந்தூர் ஆத்தூர் நிலக்கோட்டை உள்ளிட்ட தாலுகா பகுதிகளில் தற்போது வரை மழை பெய்து வந்தாலும் மாவட்ட ஆட்சியர் விடுமுறை விடாததால் மாணவ மாணவிகள் மழையில் நனைந்துகொண்டே பள்ளி கல்லூரிகளுக்கு செல்கின்றன.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
