BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

சேலம் மாவட்டம் எடப்பாடி பேருந்து நிலையத்தில் சசிகலாவை அதிமுக பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கம் அதிமுகவினர் பட்டாசு வெடித்து உற்சாகம்.

சசிகலாவை அதிமுக பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கியது செல்லும் என சென்னை குழுமிய நீதிமன்றம் இன்று தீர்ப்பு எடப்பாடி பேருந்து நிலையத்தில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி உற்சாகம். 2016 ல் அதிமுக பொதுக்குழுவில் பொதுச் செயலாளராக சசிகலாவை நியமிக்கப்பட்டார் அவர் நியமிக்கப்பட்ட சசிகலாவை 2017 பொதுக்குழுவில் சசிகலாவை நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது .

தீர்மானத்தை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் சசிகலா வழக்கு தொடர்ந்தார் வழக்கை எதிர்த்து அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் உரிமையியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

அதன் தீர்ப்பு இன்று வெளியானது அதிமுக பொதுச் செயலாளர் பதவியிலிருந்து அதிமுக பொதுக்குழுவில் நீக்கிய சசிகலாவை நீக்கியது செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு கூறியது சசிகலாவை அதிமுக பொது செயலாளர் நீங்கள் செல்லும் என தீர்ப்பு வெளியான தகவல் அறிந்த எடப்பாடி அதிமுக நகர செயலாளர் முருகன் தலைமையிலான அதிமுக நிர்வாகிகள் எடப்பாடி பேருந்து நிலையத்தில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி உற்சாகமாக கொண்டாடினர்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )