BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

ஏப்ரல் 21ஆம் தேதி முதல் ஜூன் 30 வரை உடுமலை வழியாக சிறப்பு ரயில்.

கோடைகால கூட்ட நெரிசலை தவிர்க்க தென்காசி ராஜபாளையம் மதுரை வழியாக திருநெல்வேலி மேட்டுப்பாளையம் ரயில் நிலையங்களுக்கு இடையே ஒரு வாராந்திர சிறப்பு ரயில் இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.

திருநெல்வேலி மேட்டுப்பாளையம் வாராந்திர சிறப்பு ரயில் வண்டி எண் 060 30 ஏப்ரல் 21 முதல் 30 வரை வியாழக்கிழமைகளில் திருநெல்வேலியில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை ஏழு முப்பது மணிக்கு மேட்டுப்பாளையம் சென்று சேரும். மறுமார்க்கத்தில் மேட்டுப்பாளையம் திருநெல்வேலி வாராந்திர சேவை பாண்டியன் 060 29 சிறப்பு ரயில் ஏப்ரல் 22 முதல் ஜூலை 3 வரை வெள்ளிக்கிழமைகளில் மேட்டுப்பாளையத்தில் இருந்து இரவு 7. 45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் 7:45 திருநெல்வேலி சென்று சேரும்.
இந்த ரயில்கள் சேரன்மகாதேவி அம்பாசமுத்திரம் கீழக்கடையம் பாவூர்சத்திரம் தென்காசி ராஜபாளையம் ஸ்ரீவில்லிபுத்தூர் சிவகாசி விருதுநகர் மதுரை திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் பழனி உடுமலைப்பேட்டை பொள்ளாச்சி கோயம்புத்தூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். ரயில்களில் ஒரு குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டி இரண்டு குளிர்சாதன மூன்று அடுக்கு படுக்கை வசதி பெட்டி இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள் மூன்று இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள் இணைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )