மாவட்ட செய்திகள்
டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாள் விழா-பூம்புகார் எம்எல்ஏ நிவேதா எம்.முருகன் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.
சட்டமேதை டாக்டர் அண்ணன் அம்பேத்கர் 131 வது பிறந்த நாள் விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா கீழப்பெரும்பள்ளம் கிராமத்தில் அமைந்துள்ள அவரது திருஉருவ சிலைக்கு நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம்.முருகன் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து கூறியது தமிழக முதல்வர் 110 விதியின் கீழ் சட்டமன்றத்தில் சட்டமேதை அம்பேத்கரின் பிறந்த தினத்தை சமத்துவ தினமாகக் கொண்டாட வேண்டும் என்று அறிவித்துள்ளார். இதனையடுத்து அம்பேத்கரின் பிறந்த தினத்தை அனைத்து தரப்பு மக்களும் கொண்டாடி வருகின்றனர் உலகம் கொண்டாடும் தலைவராக விளங்கி வரும் மாமேதை அம்பேத்காரின் பிறந்த தினத்தை சிறப்பாகக் கொண்டாடி வருகிறோம் இந்த தருணத்தில் தமிழக முதல்வருக்கு எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறினார்.
நிகழ்ச்சியில் திமுக ஒன்றிய செயலாளர்கள் எம்.அப்துல்மாலிக், பி.எம்.அன்பழகன், நாகை வடக்கு மாவட்ட திமுக துணை செயலாளர் மு.ஞானவேலன், மாவட்ட பொருளாளர் ஜி.என்.ரவி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப நுட்ப அணி அமைப்பாளர் பி.எம்.ஸ்ரீதர், கீழப்பெரும்பள்ளம் ஊராட்சி மன்ற தலைவர் தேவி சுரேஷ்குமார் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட திராவிட முன்னேற்ற கழக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.