மாவட்ட செய்திகள்
பிரதோஷத்தை முன்னிட்டு தஞ்சை பெரிய கோவிலில் உள்ள நந்தியம் பெருமானுக்கு பல்வேறு வகையான அபிஷேகப்பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்து மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது.
ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நந்தியம்பெருமானை வழிப்பட்டனர்.
தைப் புத்தாண்டு முதல் நாளாம் தைத் திருநாள் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் தை முதல் நாளை பிரதோஷம் நாளாக உள்ளது அடுத்து தஞ்சை பெரிய கோவிலில் தனி மண்டபத்தில் ஒரே கல்லால் 13 அடி உயரத்தில் வடிவமைக்கப்பட்ட நந்தியம்பெருமான் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தருகிறார்.
பிரதோஷத்தை முன்னிட்டு பக்தர்களால் காணிக்கையாக வழங்கப்பட்ட பால், தயிர். சந்தனம். திரவிய பொடி. மஞ்சள் பொடி, விபூதி. தேன், இளநீர், பஞ்சாமிர்தம் உள்பட பல்வேறு வகையான அபிஷேக பொருட்களை மங்கள வாத்யங்கள் இசைக்க, சிவாச்சாரியர்கள் வேத மந்திரங்கள் முழங்க, ஓதுவார்கள் திருமுறை பாட சிறப்பு அபிஷேகம் செய்து. அருகம்புல். வில்வ இலை, பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நந்தியம்பெருமானை வழிப்பட்டனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.