BREAKING NEWS

சினிமா

அஜித், விஜய் திரைப்படங்கள் வெளியிடும்போது ரசிகர்கள் ஆவின் பால் பாக்கெட்டுகளை திருடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் – அமைச்சர் எச்சரிக்கை!

சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளத்துறை அலுவலக வளாகத்தில் ஆவின் பாலகத்தை தமிழக பால்வளதுறை அமைச்சர் நாசர் திறந்து வைத்து விற்பனையை தொடங்கி வைத்தார்.

அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆவின் பாலகங்கள் வியாபார நோக்கோடு இல்லாமல் மக்களுக்கு பயன் தரக்கூடிய வகையில் செயல்பட்டு வருகிறது. 10000 ஆவின் பாலகங்கள் தமிழகம் முழுவதும் திறக்கப்பட்டுள்ளது. 50 ஹைடெக் ஆவின் பாலகங்கள் தமிழகம் முழுவதும் உள்ளது என்றார்.

நெய், வெண்ணெய், சாக்லேட் பால்பவுடர் , பாயசம் நூடில்ஸ் உள்ளிட்ட பொருட்களை ரேஷன் கடைகளில் விற்பனை செய்ய திட்டமிட்டு உள்ளதாக தெரிவித்த பால்வளத்துறை அமைச்சர் நாசர், விரைவில் இந்த திட்டம் செயல்பாட்டிற்கு வரும் என்றும் உறுதியளித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், நடிகர்கள் அஜித், விஜய் போன்ற முன்னணி நட்சத்திரங்களின் திரைப்படங்கள் வெளியிடும்போது பால் அபிஷேகத்திற்காக ரசிகர்கள் ஆவின் பால் பாக்கெட் திருடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்கனவே இது போல புகார் வந்த நிலையில் மூன்று அதிகாரிகளை பணி இடைநீக்கம் செய்து உள்ளோம் என்றார்.

கோடைகாலம் என்பதால் ஆவின் பொருட்களின் விற்பனை அதிகரித்துள்ளது. ஆவினில் பணிநியமன முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் காலி பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி மூலம் நிறப்பப்படும். கடந்த மானிய கோரிக்கையில் அறிவிக்கப்பட்ட 16-அறிவிப்புகளில் 14-அறிவிப்புகள் செயல்படுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள இரண்டு அறிவிப்புகள் நீண்டகால இலக்கு என்கிற அடிப்படையில் செயல்வடிவம் பெற உள்ளது என்றும் அமைச்சர் நாசர் அப்போது தெரிவித்தார்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )