மாவட்ட செய்திகள்
ரயில்வே துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம்.

தென் இந்திய ரயில்வே பணிக்கான தேர்வுகளை எழுத தமிழக மாணவர்கள் வட நாட்டிற்கு செல்ல வேண்டும் என ரயில்வே துறை அறிவித்துள்ளதை கண்டித்து உடுமலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ரயில் நிலையம் எதிரில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டம் தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் நடத்தப் பட்டது. இதில் திமுக, மதிமுக, மார்க்சிஸ்ட் கம்னியூஸ்ட், இந்திய கம்னியூஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், ஆதி தமிழர் பேரவை, தமுமுக உள்ளிட்ட பல்வேறு அமைப்பு க்களைச் சேர்ந்த 25 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அப்போது ரயில்வே துறையை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
