மாவட்ட செய்திகள்
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுக மயிலாடும்பாறை அருகே அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி ஆண்டு விழா.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுக மயிலாடும்பாறை அருகே அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி ஆண்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இடைநிலை ஆசிரியர் காளிதாஸ் தலைமை வகித்து பேசினார். மயிலாடும்பாறை வட்டார கல்வி அலுவலர் சரஸ்வதி முன்னிலை வகித்தார். வட்டார வள மைய மேற்பார்வையாளர் பாரதி சிறப்புரையாற்றினார். மந்திசுனை மூலகடை ஊராட்சி மன்ற தலைவர் சுப்பிரமணி, ஊராட்சி மன்ற துணை தலைவர் திலீப்குமார், பள்ளி தலைமை ஆசிரியர் ரதன் சிந்தாபாத் ஆகியோர் கலைநிகழ்ச்சி , கவிதை போட்டி, பேச்சுப் போட்டி, கட்டுரை போட்டி, உள்ளிட்ட அனைத்து போட்டிகளிலும் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
