மாவட்ட செய்திகள்
செங்கத்தில் சுற்று வட்டாரத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்கள் சூறாவளி காற்றில் தரையோடு தரை சாய்ந்ததால் விவசாயிகள் வேதனை:

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் சுற்றுவட்டாரப் பகுதிகளில்50ஆயிரம் ஏக்கருக்கு மேல்லாக விவசாயிகள் நெல் நடவு செய்து அறுவடைக்கு தயாராக இருக்கும் நிலையில் இரண்டு தினங்களுக்கு முன்பு அடித்த சூறைக்காற்றால் நெற்கதிர்கள் தரையோடு தரை சாய்ந்து உள்ளதால் அதனை எப்படி அறுவடை செய்ய போகிறோம் என தெரியாமல் விவசாயிகள் வேதனையில் உள்ளன.


கடந்த ஆடிபட்டதில் நடவு செய்த நெற்பயிர்கள் தொடர் மழையால் பெருத்த நஷ்டம் அடைந்த நிலையில் தற்போது கடன் வாங்கி இரண்டாவது போகத்திலும் அறுவடை செய்ய முடியாமல் பயிர்கள் தரையில் சார்ந்து உள்ளதால் தங்களது வாழ்வாதாரத்தை காப்பாற்ற தமிழக அரசு உடனடியாக போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து தங்களுக்கு நிவாரணம் வழங்கி தமிழகத்தில் விவசாயம் மற்றும் விவசாயிகள் அறியாமல் காப்பாற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
