தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தம்!!
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தம்!!

ரஷ்யா உக்ரைன் போர் காரணமாக இந்தியா முழுவதும் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் பெரும்பாலான மாவட்டங்களில் மின்சார பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. தமிழகத்திலும் மின்சார தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது.
தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் தலா 210 மெகாவாட் மின்சார உற்பத்தி திறன் கொண்ட 5 மின்உற்பத்தி எந்திரங்கள் செயல்பட்டு வருகின்றன. தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் தினசரி நிலக்கரி தேவை 9 ஆயிரம் டன். நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக கடந்த சில நாட்களாக மின் உற்பத்தி அவ்வப்போது நிறுத்தப்பட்டு வந்தது.

இந்நிலையில், நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 5 அலகுகளில் இன்று அதிகாலை முதல் மின் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 5 யூனிட்டுகளில் மொத்தம் 1050 மெகா வாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் மின் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அனல் மின் நிலையத்தில் போதுமான அளவு மட்டுமே நிலக்கரி கையிருப்பு உள்ளதால் அனல் மின் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
