154வது காந்தி பிறந்ததை தினத்தை முன்னிட்டு ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம் பகுதிகளில் கிராமசபை கூட்டங்களில் பொதுமக்கள் பங்கேற்பு.

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம் பகுதியில் உள்ள ஊராட்சி மன்றங்களில் கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றன.
ஆத்தூர் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் துணைத் தலைவர் சையது அபுதாஹிர் தலைமை தாங்கினார் ஊராட்சி செயலாளர் கண்ணன் மற்றும் அரசு அதிகாரிகள் மற்றும் வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
இக் கூட்டத்தில் 7 வார்டு மற்றும் 11 பொது மக்களுக்கு கழிப்பிடம் கட்டுவதற்கு கோரிக்கை விடுத்தனர் மற்றும் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் அனைவருக்கும் வேலை வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர் பின்பு துணைத் தலைவர் சையது அபுதாஹிர் அனைவருக்கும் ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் விரைவில் அனைவருக்கும் கிடைக்கும் என்று உறுதி கூறினார்.
அக்கரைப்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற கூட்டத்திற்கு தலைவர் லட்சுமி சக்திவேல் தலைமை தாங்கினார் துணைத் தலைவர் மலைச்சாமி மற்றும் வார்டு உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர் கிராம சபை கூட்டத்தில் மல்லையாபுரம் காலனியில் தார் சாலை மற்றும் மயான கரைக்கு தார் சாலை அமைத்து தரவேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
போடிகாமன்வாடி ஊராட்சியில் கிராம சபை கூட்டத்தில் தலைவர் நாகலட்சுமி சசிகுமார் தலைமை தாங்கினார் மற்றும் வார்டு உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர் இக்கூட்டத்தில் அங்கன்வாடி மையம் கட்டிடம் கட்டுவதற்கு பரிந்துரை செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் மற்றும் குடிநீர் தொட்டி சொக்கலிங்கபுரம் வீரசக்கம்பட்டி 2 கிராமங்களில் குடிநீர் தொட்டி கட்டித் தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
எஸ் பாறைப்பட்டி ஊராட்சி சமுதாயக்கூடத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில் தலைவர் பாலாஜி தலைமை தாங்கினார் கூட்டத்தில் துணைத் தலைவர் சுருளியம்மாள் முன்னிலை வகித்தார் ஒன்றிய கவுன்சிலர் காணிக்க சாமி துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஹேமலதா ஊராட்சி செயலாளர் நடராஜன் வார்டு உறுப்பினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
வீரக்கல் ஊராட்சி கும்மம்பட்டி கிராமத்தில் உள்ள திருவள்ளுவர் கலை அரங்கத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் தலைவர் ராஜேஸ்வரி தங்கவேல் தலைமை தாங்கி பேசினார் கூட்டத்தில் துணைத் தலைவர் யூசின் ராஜா முன்னிலை வகித்தார் ஊராட்சி செயலாளர் முத்துசாமி வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
சித்தரேவு ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் வளர்மதி மலர் கண்ணன் தலைமை தாங்கி பேசினார் ஊராட்சி செயலாளர் சிவராஜன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர் இக் கூட்டத்தில் குடிநீர் மற்றும் கழிவு நீர் சாக்கடை அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
தேவரப்பன்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் ரேவதி மாரிமுத்து தலைமை தாங்கினார் துணைத் தலைவர் பிருத்விராஜன். மற்றும் ஊராட்சி செயலாளர் மணவாளன் இக்கூட்டத்தில் தேவரப்பம்பட்டி ஊராட்சியில் பொது மயான கரையில் ஆக்கிரமிப்பு அதிகமாக உள்ளது அதை உடனே அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
மேலும் நியாய விலை கடை பழுதடைந்த நிலையில் உள்ளது புதிய கட்டடத்தை கட்டித் தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர் இக்கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.