BREAKING NEWS

ஒன்பதாம் வகுப்பு அரசு பள்ளி இரண்டு மாணவர்கள் கிணற்றில் குளித்த போது நீரில் மூழ்கி மாணவன் பிரபாகரன் உயிரிழப்பு.

ஒன்பதாம் வகுப்பு அரசு பள்ளி இரண்டு மாணவர்கள் கிணற்றில் குளித்த போது நீரில் மூழ்கி மாணவன் பிரபாகரன் உயிரிழப்பு.

 

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கந்தசாமி புதூர் பகுதியைச் சேர்ந்தவர் சிங்காரவேலன் இவரது மகன் பிரபாகரன் (14) இவர் கீரிப்பட்டியில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார்,

 

தற்போது அரையாண்டு தேர்வு நடைபெற்று வரும் நிலையில் இவர்களுக்கு மாலையில் தேர்வு நடைபெறும் என்பதால் அவருடன் அதே வகுப்பில் படித்து வரும் சீலியம்பட்டி கிராமத்தில் மலையம்பட்டி பகுதி சேர்ந்த நிதின் என்ற மாணவனின் வீட்டுக்கு சென்று அவரை சைக்கிளில் அழைத்து வந்துள்ளார்,

 

 அப்போது மலையம்பட்டி பகுதியில் உள்ள ஒரு விவசாயக் கிணற்றில் தண்ணீர் அதிக அளவில் இருப்பதை பார்த்து இவர்கள் இருவரும் குளிக்க திட்டமிட்டு அந்த கிணற்றில் இறங்கி இருவரும் குளித்துக் கொண்டிருந்த போது திடீரென நீண்ட நேரம் ஆகியும் பிரபாகரன் மேலே வராததைக் கண்டு அவருடன் வந்த மாணவன் நிதின் என்பவர் கூச்சலிடவே அக்கம் பக்கத்தினர்.

 

 

ஓடி வந்து பார்த்துவிட்டு ஆத்தூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடி உடலை மீட்டனர் மேலும், மல்லியகரை போலீசாரிடம உடலை ஒப்படைத்தனர்.

 

பின்னர் உடலை பெற்றுக்கொண்டு உடற் கூறாய்வுக்காக ஆத்தூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்,

 

பள்ளிக்குச் சென்ற மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )