கோவில்பட்டி அருகே பள்ளிக்குள் புகுந்து சாதியை சொல்லி திட்டி மாணவர் மீது செருப்பால் தாக்குதல் – 2பெண்கள் மீது வழக்கு பதிவு.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே சிதம்பரம்பட்டி கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் அதை ஊரைச் சேர்ந்த சஞ்சய் என்ற சிறுவன் 7ம் வகுப்பு படித்து வருகிறார். அவருடன் அதை கிராமத்தைச் சேர்ந்த மற்றொரு மாணவி பயின்று வருகிறார். நேற்று முன்தினம் வகுப்பில் அச்சிறுவன் மாணவி மீது விழுந்ததாக கூறப்படுகிறது.
இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறி உள்ளது. இதையடுத்து ஆசிரியர்கள் இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில் நேற்று அந்த மாணவியின் தாயார், மற்றொரு பெண்மணி சேர்ந்து பள்ளி வகுப்புறைக்குள் புகுந்து அந்த சிறுவனை செருப்பால் அடுத்து தாக்கியதாகவும், ஜாதி பற்றி அவதூறாக பேசியதாகவும் கூறப்படுகிறது. நீங்கள் காயம் அடைந்த அந்த மாணவர் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதற்கிடையில் பிரச்சனை தொடர்பாக நாலாட்டின்புதூர் போலீசார் மாணவியின் தாய் மற்றும் அவருடன் அவந்த பெண்மணி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட மாணவரின் உறவினர்கள் தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோவில்பட்டி டி.எஸ்.பி. வெங்கடேஷ்யிடம் மனு அளித்துள்ளனர்.
தாக்குதலுக்குள்ளான மாணவர் தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. வகுப்புறைக்குள் தாக்குதல் நடத்திய போது ஆசிரியர்கள் தடுக்கவில்லை.. வெளியே சென்று அடிக்க சென்னதாக பாதிக்கப்பட்டுள்ள மாணவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.