BREAKING NEWS

மாந்தை கருப்பூரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலய தீமிதி திருவிழா.

மாந்தை கருப்பூரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலய தீமிதி திருவிழா.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா மாந்தை கருப்பூரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலய தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.  கோரையாற்றிலிருந்து சக்தி கரகம் அலங்கார காவடிகள் புறப்பட்டு வான வேடிக்கையுடன் மேளதாள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர்.

 

 

பின்னர் விரதம் இருந்த பக்தர்கள் அக்னி குண்டத்தில் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர் இதில் பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வணங்கி வழிபாடு செய்தனர் அன்று இரவு அனைத்து வீதிகள் வழியாகவும் அம்மன் வீதியுலா காட்சி நடைபெற்றது.

 

 

இதில் அசம்பாவிதம் எதுவும் நடைபெறாமல் இருக்க பாலையூர் காவல் நிலைய காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

 

CATEGORIES
TAGS