ராணிப்பேட்டை அருகே அரசு தொடக்கப் பள்ளிக்கு குடிநீர் சுத்திகரிப்பு கருவி அளித்து JCI பள்ளியை தத்து எடுத்தனர்

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா தாலுக்கா வாணா பாடி பஞ்சாயத்து எடப்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஜே சி ஐ. ஆஸ்ட்ராய்ட்ஸ் சார்பில் குடிநீர் சுத்திகரிப்பு கருவி அளித்து தத்து எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் ஜே .சி .ஐ தலைவர் ரத்தினகுமாரி கலந்துகொண்டு துவக்கி வைத்து இந்தப் பள்ளிக்கு குடிநீர் வசதி சுற்றுப்புற சூழல் விளையாட்டு உபகரணங்கள் கல்வி உபகரணங்கள் வழங்குவதாகவும் உறுதியளித்தார்.
மேலும் இதில் சிறப்பு விருந்தினர்களாக. சிப்காட் காவல் உதவி ஆய்வாளர் சஞ்சீவி ராயன் தலைமை காவலர் சுதாகர்
மற்றும்ஓய்வு பெற்ற தமிழ் ஆசிரியை லதாஸ்ரீதரகோபாலன் ஜெ சி ஜோனல் உப தலைவர் மனோஜ் மற்றும்தலைமை ஆசிரியர் கோசலா தேவி ஜெயகாந்தன் ஆகியோர் பங்கேற்று குடிநீர் சுத்திகரிப்பு கருவியின் தேவைகளை குறித்துபேசினார்கள் இதேபோல் குடிநீர் சுத்திகரிப்பு கருவியில் தண்ணீர் பிடித்து அனைவருக்கும் குடிக்க கொடுத்து துவக்கி வைத்தார்கள்.
இதேபோல்பல சேவைகள்செய்ய வேண்டும் .மேலும் இதில் ஜெ. சி ஐ காஞ்சனா . மைக்கேல் பிரபுதாஸ் நிஷா தேவி எத்திராஜ் மற்றும் ஊர் பொதுமக்கள் இளைஞர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.முடிவில் மகேஷ் பத்ம தாஸ் நன்றி வழங்கினார்