நாமக்கல் திமுக மேற்கு மாவட்ட செயலாளர் மதுரா செந்தில் மற்றும் திருச்செங்கோடு நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு ஆகியோர் தங்கள் வாக்கினை பதிவு செய்தனர்….
நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு தீவிரமாக சென்று கொண்டுள்ளது பல்வேறு பிரமுகர்களும் அரசியல் தலைவர்களும் வாக்களித்து வருகின்றனர் அதன் வரிசையில் திருச்செங்கோடு நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு தனது கணவர் சுரேஷ் பாபு உடன் சென்று திருச்செங்கோடு பெரிய பாவடி அருகே உள்ள செங்குந்தர் கல்வி நிலையத்தில் உள்ள 179 வது பூத்தில் தங்கள் வாக்கினை பதிவு செய்தனர் தொடர்ந்து திமுக நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் மதுரா செந்தில் சி.ஹெச்.பி காலனி பகுதியில் உள்ள அவ்வை கல்வி நிலையத்திள் உள்ள 196 வது வாக்குச்சாவடியில் அவர் ஜனநாயக கடமையை ஆற்றினார்…
முதல் தலைமுறை வாக்காளர்கள் வயதானவர்கள் மாற்றுத்திறனாளிகள் என அனைத்து தரப்பு மக்களும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றன.
CATEGORIES நாமக்கல்
TAGS நாமக்கல்