ஆசியாவின் மிகப்பெரிய தொலைநோக்கி வானாராய்ச்சி அமைப்பான “வைணு பாப்பு வானாய்வகம் திறந்துவைக்கப்பட்ட தினம்

தமிழ்நாட்டில் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகில் காவலூர் ஜவ்வாது மலையில் ஆசியாவின் மிகப்பெரிய தொலைநோக்கி அமைந்துள்ள வானாராய்ச்சி அமைப்பான “வைணு பாப்பு வானாய்வகம் “ (Vainu Bappu Observatory) பிரதமர் ராஜீவ் காந்தியால்
திறந்துவைக்கப்பட்ட தினம் இன்று.
( 06 ஜனவரி 1986 )


இது புகழ்பெற்ற இந்திய வானியியலாளர் Manali Kallat Vainu Bappu ன் முயற்சியால் உருவாக்கப்பட்டதால், இவர் காலமானபின் இது திறக்கப்பட்டதால் இவரது பெயரே இதற்கு சூட்டப்பட்டது. இங்குள்ள 2.34 மீட்டர் விட்டமுடைய தொலைநோக்கி ஆசியாவிலேயே மிகப்பெரியதாகும்.


ஒவ்வொரு சனிக்கிழமையும் மாலை 6 மணியிலிருந்து இரவு 10 மணி வரை வைணு பாப்பு தொலைநோக்கி எவ்வாறு இயங்குகிறது என்பது பற்றி பார்வையாளர்களுக்கு காட்டப்படும், வானம் தெளிவாக இருப்பின் 15 செ.மீ தொலைநோக்கி மூலம் இரவில் வானம் எவ்வாறு உள்ளது என காட்டப்படும்.

இங்கு கண்டுபிடிக்கப்பட்டவைகள்:-
வியாழன் (Jupiter) கோளின் நிலவான Ganymede வளிமண்டலம் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.


சூரியக்குடும்பத்தில் உள்ள யுரேனஸ் (Uranus) கோளைச்சுற்றி வளையங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
