மாவட்ட செய்திகள்
திருச்சியில்வாகனத்தில் சென்று பெண்ணிடம் 1 லட்சம் ரூபாய் வழிப்பறி – சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை.

திருச்சியில்வாகனத்தில் சென்று பெண்ணிடம் 1 லட்சம் ரூபாய் வழிப்பறி – சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை.
திருச்சி ஸ்ரீரங்கம் கீழவாசல் கீழக்கரை பகுதியை சேர்ந்தவர் பிரியங்கா(46). இவர் ஸ்ரீரங்கம் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள கனரா வங்கியில் நகையை அடகு வைத்து 1லட்ச ரூபாய் பெற்றுள்ளார்.

இதை வங்கியின் உள்ளேயே இருந்து பார்த்த அடையாளம் தெரியாத வாலிபர் அவர் வீட்டிற்க்கு செல்லும் வரை பின் தொடர்ந்து சென்றுள்ளார். பிரியங்கா தனது வீட்டிற்க்கு அருகே தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தும் போது அவரிடம் இருந்த
1லட்ச ரூபாய் பணத்தை வழிப்பறி செய்து தனது இருசக்கர வாகனத்தில் வேகமாக தப்பி சென்றுவிட்டார். இது குறித்து பிரியங்கா ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து வங்கியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பட்டப்பகலில் பெண்ணிடம் பணத்தைப் பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
