BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

வனத்துக்குள் திருப்பூர் அமைப்பின் மூலம் 2 லட்சத்து 60 ஆயிரம் மரக்கன்றுகள் நிறைவு விழா.

வனத்துக்குள் திருப்பூர் அமைப்பின் மூலம் 2 லட்சத்து 60 ஆயிரம் மரக்கன்றுகள் நிறைவு விழா மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் மரக்கன்றுகளை நட்டு சிறப்புரையாற்றினார்.

திருப்பூர் மாநகராட்சி இடுவாய் அடுத்த சின்னகாளிபாளையம் மூங்கில் பூங்காவில் வனத்துக்குள் திருப்பூர் தன்னார்வ அமைப்பு சார்பில் மரம் நடுவிழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். வனத்துக்குள் திருப்பூர் அமைப்பின் மூலம் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் நினைவாக இதுவரை 11 லட்சம் மரக்கன்றுகள் நட்டு பராமரித்து வருகின்றனர்.

இந்த ஆண்டு துவக்கம் முதல் 3 மாதங்களில் 2 லட்சத்து 60 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டு முடித்துள்ளனர். அதன் ஒருபகுதியாக இன்று நடைபெற்ற விழாவில் 6 மாதங்களில் நட திட்டமிடப்பட்ட பணிகள் பொதுமக்களின் ஆர்வத்தால் 3 மாதங்களுக்குள் முழுமையடைந்துள்ளதாகவும் தொடர்ந்து மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கும் பணிகள் நடைபெறும் எனவும் தெரிவித்தனர்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )