BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

மயிலாடுதுறை அருகே குடிநீரில் ஓஎன்ஜிசி எண்ணெய் கலந்து வருவதால் 15-க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, வயிற்று போக்கு, மயக்கம். 2 குழந்தைகள் உட்பட 6 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா சேத்திரபாலபுரம் மெயின் ரோட்டில் ஓஎன்ஜிசி எண்ணெய் சேமிப்பு கிடங்கு உள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள எண்ணெய் கிணறில் இருந்து எடுக்கப்படும் வாயு மற்றும் எண்ணெய் இங்கு சேமித்து வைக்கப்பட்டு வருகின்றன.

இந்த சேமிப்பு கிடங்கிற்கு எதிரே ராமாமிர்தம் தெரு உள்ளது. இத்தெருவில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதிக்கு என கடந்த 3 வருடங்களுக்கு முன்பு புதிதாக மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் வழங்கப்பட்டது. இந்த நீர்த்தேக்க தொட்டியில் இருந்து வரும் குடிநீரில் கடுமையான காவி படிந்து இருப்பதாகவும், மேலும் கடந்த ஒருவாரமாக எண்ணெயும் கலந்து வருவதால் இப்பகுதியில் உள்ள குழந்தை மற்றும் பெரியவர்களுக்கு அதிக அளவில் தோல்அரிப்பு ஏற்படுவதாகவும் மேலும் இந்த தண்ணீரை பருகுவதால் வாந்தி வயிற்றுப் போக்கு அதிக அளவில் உள்ளதாகவும் இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் 15க்கும் மேற்பட்டோர் இதனால் பாதிக்கப்பட்டுள்ள குத்தாலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்றுள்ளனர். இதில் 6 பேர் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் அப்பகுதியில் உள்ள பெரும்பாலான குழந்தைகளுக்கு தோலில் அரிப்பு ஏற்பட்டு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே இப்பகுதியில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும் இந்த ஓஎன்ஜிசி எண்ணெய் சேமிப்பு கிடங்கு வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )