HACKATHON’ என்ற மாணவர்களுக்கு இடையிலான அறிவாற்றல் திறன் போட்டி

திருச்சி தேசிய தொழில்நுட்ப கழகத்தில் பேரிடர் மேலாண்மை குறித்த சர்வதேச கருத்தரங்கமும், ‘HACKATHON’ என்ற மாணவர்களுக்கு இடையிலான அறிவாற்றல் திறன் போட்டியும் நடைபெற்றது.
அதனை சென்னை பெருநகர வெள்ள பேரிடர் தடுப்பு மற்றும் மேலாண்மை ஆலோசனை குழு தலைவரும், தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவன முன்னாள் கூடுதல் செயலாளருமான திருப்புகழ். ஐ.ஏ.எஸ்., தொடங்கி வைத்து சிறப்புறையாற்றினார்.
இன்று தொடங்கப்பட்ட இக்கருத்தரங்கு வரும் 11ஆம் தேதி நிறைவடையவுள்ளது. அதில் இந்தியா முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகள், கலை, அறிவியல் கல்லூரிகள் ஆகியவற்றில் பயிலும் சுமார் 200 மாணவர்கள் பங்கேற்றுள்ளனர்.
பேரிடர் காலத்தில் எதிர்கொள்ள வேண்டிய பிரச்சனைகளை, தீர்ப்பதற்கான வழிமுறைகளை 28 மணி நேரத்தில் மாணவர்கள் கண்டுபிடிக்க வேண்டும். அதற்கான அறிவாற்றல் திறன் போட்டியில் இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 150 மாணவர்கள் 58 அணியாக பங்கேற்றுள்ளனர்.
அதில் முதலிடம் பிடிக்கும் அணியினருக்கு ₹25 ஆயிரம் ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது.