அஇஅதிமுக நல்லூர் வடக்கு ஒன்றிய செயலாளர் நியமனம்.! கட்சியினர் பட்டாசுகள் வெடித்து உற்சாக கொண்டாட்டம்.

– கடலூர் மாவட்ட செய்தியாளர் கொ.விஜய்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், பொருளாளருமான முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் கடலூர் மேற்கு மாவட்ட நிர்வாகிகள் 184 பேருக்கு நேற்று பொறுப்புகள் வழங்கினார்.
அந்த வகையில் கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் சுந்தர்ராஜன் அவர்களின் பரிந்துரையின் அடிப்படையில் வேப்பூர் செந்தில்குமார் நல்லூர் வடக்கு ஒன்றிய செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்நிலையில் இன்று காலை வேப்பூர் வந்த ஒன்றிய செயலாளர் செந்தில்குமாருக்கு கட்சியினர் பட்டாசுகள் வெடித்து கொண்டாடினர் பின்னர் அவருக்கு சால்வைகள் அணிவித்து மரியாதை செய்தனர்.
இந்நிகழ்வில் மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் கே பி. கொளஞ்சி, மாவட்ட பேரவை செயலாளர் ஏ ஆர். பூபதி, மாவட்ட அமைப்புச் செயலாளர் க. புகழேந்தி, மாவட்ட இலக்கிய அணி செயலாளர் கண்ணன், ஒன்றிய அவைத் தலைவர் ஆதியூர் கஞ்சமலை, இணை செயலாளர் முத்துலட்சுமி, துணைச் செயலாளர்கள் சுப்பிரமணியன், மலர் ராஜேந்திரன்,
ஒன்றிய பொருளாளர் விஸ்வநாதன், மாவட்ட பிரதிநிதிகள் நல்லூர் ரவிச்சந்திரன், சாத்தியம் சின்னசாமி, வேப்பூர் உஷா மற்றும் நிர்வாகிகள் ஐவதுகுடி கணேசன், ஆதியூர் சந்திரசேகர், துரைசாமி, கிழக்குறிச்சி தங்கவேல் உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.