அதிமுகவினர் ஏன் குழப்புறாங்கனே தெரியல..

அதிமுகவில் இருக்கும் சிலர் அதிமுக பாஜக கூட்டணியை ஏன் குழப்புகிறார்கள் என்றே தெரியவில்லை என பாஜக பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் இருக்கும் சிலர் அதிமுக பாஜக கூட்டணியை ஏன் குழப்புகிறார்கள் என்றே தெரியவில்லை என பாஜக பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் ஆதங்கம் தெரிவித்துள்ளார். அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் தனிப்பட்ட கொள்கை இருக்கிறது என்றும் ஆனால் பொதுப் பிரச்சினைகளில் ஒன்றாக செயல்படும்வோம் என்றும் அவர் கூறியுள்ளார்.
தமிழகத்தில் எப்படியாவது கால்பதிக்க வேண்டும் என்ற முயற்சியில் பல ஆண்டுகளாக பாஜக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அதிமுக பாமக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்து வருகிறது. கூட்டணியில் இருந்தாலும் தமிழகத்தில் தங்கள் கட்சிக்கென தனித்துவத்தை உருவாக்க வேண்டும் என்ற முயற்சியில் அக்கட்சியினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். அதேநேரத்தில் நடந்துமுடிந்த நகர்புற உள்ளாட்சி மன்ற தேர்தலில் பாஜக தனித்து போட்டியிட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது. ஆனால் எதிர்பார்த்ததைவிட அக்காட்சி அதில் கணிசமாக வெற்றி வாகை சூடியது, சென்னையில், கன்னியாகுமரி என பல இடங்களில் அதிமுக அவையே பின்னுக்குத் தள்ளி இரண்டாம் இடத்திற்கு முன்னேறியது. எதிர்வரும் தேர்தலில் பாஜக அதிமுக கூட்டணி வைத்து தேர்தலை எதிர்கொள்ளுமா அல்லது தனித்து போட்டியிடுமா என்ற கேள்வி இரு கட்சியினர் மத்தியில் இருந்து வருகிறது.
ஆனால் இதற்கிடையில் அம்மா பேரவை நிகழ்ச்சிகள் கலந்து கொண்டு பேசிய அதிமுக அமைப்புச் செயலாளர் பொன்னையன் அதில் பாஜகவினரை கடுமையாக விமர்சித்திருந்தார். பாஜக மாநில உரிமைகளுக்காக குரல் கொடுப்பதில்லை ஆனால் அதிமுகவுடன் சேர்ந்து கட்சியை வளர்க்க பார்க்கிறார்கள், பல இடங்களில் அதிமுகவை பின்னுக்கு தள்ளி விட்டதாக பாஜகவினர் பேசி வருகின்றனர். ஆனால் இதுபோன்ற விமர்சனங்களுக்கு அதிமுகவில் தொழில்நுட்ப பிரிவு தக்க பதிலடி கொடுக்க வேண்டும், தமிழகத்தில் பாஜக வளர்வது அதிமுகவுக்கு நல்லது அல்ல என்று அவர் காட்டமாக அவர் கூறியதாக தகவல் வெளியானது. இது தொடர்பான செய்திகள் பாஜகவினரை அதிர்ச்சி அடைய வைத்தது. இதற்கு விளக்கம் கொடுக்கும் வகையில் செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ் இபிஎஸ் அமைப்புச் செயலாளர் அண்ணன் பொன்னையனுடைய கருத்து தனிப்பட்ட கருத்து எனகூறி அதற்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.
ஆனாலும் பென்னையன் பேச்சு பாஜகவினர் மத்தியில் ஆறாத வடுவாகவே மாறியுள்ளது. இந்நிலையில் அதிமுக பாஜக கூட்டணி நிலைமை குறித்து தனியார் ஊடகம் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பாஜக பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் காட்டமாக பதில் அளித்துள்ளார். அதில் அதிமுகவினரை அவர் கடுமையாக விமர்சித்துள்ளார். அப்பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது
தமிழகத்தில் பாஜக வளர்வது அதிமுகவுக்கு நல்லது இல்லை என அதிமுக அமைப்புச் செயலாளர்பொன்னையன் கூறியிருக்கிறாரே என்ற கேள்விக்கு, பொன்னையன் அரசியலில் மூத்த தலைவர், மிகவும் அனுபவப்பட்டவார், ஆனால் அப்படிப்பட்டவர் பக்குவம் இல்லாமல் பேசி இருக்கும் விதம் தவறானது. கண்டிக்கத்தக்கது. கூட்டணியிலேயே இருக்கும் அதிமுகவிலிருந்து எப்படி இப்படி ஒரு கருத்தை வந்தது என்பது கேள்விக்குறிதான். பாஜகவை பற்றி ஸ்டாலினை விட மோசமான குற்றச்சாட்டை அவர் முன் வைத்திருக்கிறார்கள். பேசிய இடம் தன்னிச்சையானது அல்ல, அதிமுக தலைமை கழக அலுவலகம். அதில் அவர் இப்படி பேசுவது அக்காட்சியின் அதிகாரப்பூர்வ பேச்சாகவே பார்க்கப்படும்.
திமுகவினர் எங்களுக்கு பொது எதிரி, அவர்கள் விமர்சிக்கலாம், ஆனால் அதிமுகவில் இருக்கும் சிலல் ஏற் குழப்புகிறார்கள் என்றே புரியவில்லை. இப்படியே போய்க் கொண்டிருந்தால் கூட்டணிக்குள் ஐக்கியம் எப்படி வரும்? அதேபோல் திமுக தான் பொது எதிரி என்றால் திமுகவை எதிர்த்து பாஜக நடத்தும் போராட்டங்களில் ஏன் அதிமுகவுக்கு அழைப்பு விடுப்பதில்லை.? என்ற கேள்விக்கு பதிலளித்த நாகராஜன், நாங்கள் அழைப்பதில்லை ஒவ்வொரு கட்சிக்கும் தனிப்பட்ட கொள்கை இருக்கிறது பொதுவான பிரச்சினைகளில் ஒன்று சேர்ந்து போராடுவோம். மும்மொழி கொள்கை போன்ற பிரச்சனைகளில் பாஜக நிலைப்பாட்டிலிருந்து பாமகவும், அதிமுகவும் வேறுபடுகின்றன. அவர்கள் வந்தால்தான் நாங்கள் போராடுவோம் என்று இல்லை, தமிழர்கள் நலன் சார்ந்து தமிழ் நாட்டின் முன்னேற்றத்திற்கு குரல் கொடுக்கக்கூடிய கட்சியாக பாஜக உள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.