BREAKING NEWS

அம்பாசமுத்திரம் வக்கீல் சங்கம் ஆர்ப்பாட்டம்..

அம்பாசமுத்திரம் வக்கீல் சங்கம் ஆர்ப்பாட்டம்..

திருநெல்வேலி மாவட்டம்;
அம்பாசமுத்திரம் ஒருங்கிணைந்த கோர்ட் வளாகம் முன்பு அம்பாசமுத்திரம் வக்கீல் சங்க கூட்டு குழுவின் தீர்மானத்தின் படி தமிழகத்தில் சமீபத்தில் நடைபெற்ற வரும் வழக்கறிஞர்கள் மீது கொலை மற்றும் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தல் மற்றும் வக்கீல்கள் பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக மத்திய, மாநில அரசுகள் இயற்ற வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

ஆர்ப்பாட்டத்தில் அம்பை வக்கீல் சங்க தலைவர்கள் கந்தசாமி, ராஜேந்திரன், நிர்வாகிகள் ராமராஜ் பாண்டியன், செந்தில்குமார், உள்ளிட்டர் சிறப்புரையாற்றினர். வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற கோரி கண்டன கோசங்கள் எழுப்பப்பட்டது.

 

 

நிகழ்ச்சியில் வக்கீல்கள் சாகுல் ஹமீது மீரான், பிரதாபன், ஆதி மூலம், ரமேஷ், லெனின், ஜெகன் ஸ்ரீநாத், குமாரவேல் பாண்டியன், முத்துராமலிங்கம், ஆறுமுகம், சுரேஷ், ராஜு, கனகமுத்து குட்டி, காசிம், காஜா முகைதீன், அக்னி ராஜ், முன்னாள் அரசு வக்கீல்கள் குமார், முத்து விஜயன், சசிகலா ராணி, ராதிகா, ஜெனிபர், சங்கரம்மாள், உள்பட பல வக்கீல்கள் கலந்து கொண்டனர்.

Share this…

CATEGORIES
TAGS