அரக்கோணம் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்!!!
அரக்கோணம் சப் கலெக் டர் அலுவலகம் முன்பு நேற்று மாலை அரக்கோ ணம், நெமிலி தாலுகாவை சேர்ந்த விஏஓகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு ராணிப்பேட்டை மாவட்ட செயலாளர் மணிகண்டன் தலைமை தாங்கினார். நெமிலி வட்ட தலைவர் கோபிநாத் முன்னிலை வகித்தார். அரக் கோணம் வட்ட தலைவர் ராஜேஷ் பழைய திட்டத்தை வரவேற்றார். பென்ஷன் மீண்டும் கொண்டு வரவேண்டும். ஈட்டிய விடுப்புக்கான சம்பளத்தை விரைந்து வழங்க வேண்டும்.
மேலும் பட்டம் முடித்த விஏஓ க்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். இதில் விஏஓகள் கொய்யாமணி, லட்சுமணன், டோமேசன் உள்ளிட்ட 70க்கும் மேற்பட்ட விஏஓ க்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மாவட்ட செய்தியாளர் ஆர்.ஜே.சுரேஷ்குமார்.
CATEGORIES ராணிபேட்டை
TAGS vaoஅரக்கோணம் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்அரக்கோணம் சப் கலெக் டர் அலுவலகம்அரசியல்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்முக்கிய செய்திகள்ராணிப்பேட்டை மாவட்டம்