ஆத்தூர் சட்டமன்ற தொகுதி சின்னாளப்பட்டியில் திமுக இளைஞரணி சார்பில் திராவிட மாடல் பயிற்சிப் பாசறை கூட்டம்நடைபெற்றன.

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதியில் ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம் ரெட்டியார் சத்திரம் ஊராட்சி ஒன்றியம் இளைஞரணி சார்பில் நடைபெற்ற திராவிட மாடல் பயிற்சி பாசறை நடைபெற்றன.
சின்னாளப்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் இ.பெரியசாமி தலைமை தாங்கி, தலைமையுரை யாற்றினார். பாராளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி முன்னிலை வகித்தார்.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்ற திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா எம் பி மற்றும் ராஜீவ்காந்தி கருத்துரையும் பயிற்சியும் வழங்கினார்கள்.
திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் பழனி சட்டமன்ற உறுப்பினர் இ.பெ.செந்தில்குமார். மற்றும் திமுக மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கணேசன், மாணவரணி அமைப்பாளர் கி.பிரபாகரன் ஆகியோர் வரவேற்றனர்.
சிறப்பு அழைப்பாளர்களாக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரெட்டியார்சத்திரம் ஒன்றிய செயலாளர் கிழக்கு மேற்கு பொதுக்குழு உறுப்பினர் ஆத்தூர் க. நடராஜன் திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் C.ராமன் கிழக்கு ஒன்றிய செயலாளர் முருகேசன்
ஆத்தூர் மேற்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் மணிகண்டன் மற்றும் ஒன்றிய கிளைக் கழக, பேரூர் கழக, இளைஞர் அணி, மாணவர் அணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
