“ஆரோக்கியமான வாழ்க்கைக்கு மனநலம் ” என்ற தலைப்பில் விழிப்புணர்வு முகாம் கன்னியாகுமரியில் நடைபெற்றது..

கன்னியாகுமரி மாவட்டம், திருச்சிலுவை கல்லூரி சமூக பணித்துறை மற்றும் C.M.S . ஆண்கள் இல்லம் இணைந்து “ஆரோக்கியமான வாழ்க்கைக்கு மனநலம் ” என்ற தலைப்பில் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
முகாமிற்கு திருச்சிலுவை கல்லூரி சமூகப்பணி மாணவி விஸ்மயா கே.கே ஒருங்கிணைப்பாளராக இருந்தார்.
இதில் ஸ்ரீமதி. சிவதர்ஷினி நமது அன்றாட வாழ்வில் மன ஆரோக்கியத்தின் முக்கியத்துவம் குறித்தும் மனநல மேம்பாட்டிற்கான வழிமுறைகள் பற்றியும் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் ஐம்பதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
CATEGORIES Uncategorized
