ஆறுவயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இரண்டு தாத்தாக்கள் கைது..
செங்கை ஷங்கர், செங்கல்பட்டு.
காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலம் நல்லூர் திருப்பதி நகர் பகுதியை சேர்ந்த பரந்தாமனின் மகன் பரணி(30) மற்றும் மருமகள் நந்தினி (25) ஆகியோர் தனது மகள் 1வயதாக இருக்கும் போதே நந்தினி மற்றும் பரணி இருவருமே வெவ்வேறு திருமணம் செய்து கொண்டு ஊரைவிட்டு சென்றுவிட்டனர். 1வயது முதல் அந்த பெண் குழந்தை தனது பாட்டி தாத்தா அரவணைப்பில் வளர்ந்து வருகிறார். தற்போது சிறுமிக்கு 6வயதாகிறது.
இந்நிலையில்சிறுமியிடம் அதே பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் (60) மற்றும் தேவராஜ் (55)ஆகிய இரண்டு நபர்கள் சிறுமியிடம் தொடர்ந்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து (Child welfare ) காஞ்சிபுரம் சைல்டுவெல்ஃபேர் மையத்திற்கு தகவல் கிடைத்ததின் பேரில் மேற்கண்ட சிறுமியின் வீட்டிற்கு வந்து சிறுமியை அழைத்துச் சென்று காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் பரிசோதித்து பார்த்தனர். அதில் சிறுமிக்கு பாலியல் தொல்லை செய்திருப்பது உறுதி செய்யப்பட்டது.
அதனை தொடர்ந்து கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமி அளித்த புகாரின் அடிப்படையில் செல்லியம்மன் கோவில் தெரு, திருப்பதி நகர், நல்லூர், சோமங்கலம்பகுதியை சேர்ந்த பெருமாள் மூப்பனார் மகன் ராஜேந்திரன் (55) என்பவரை கைது செய்து மேற்கொண்ட விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த தேவராஜ் (55) என்பவரும் சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டது. தெரிய வந்ததால் மேற்படி இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.