BREAKING NEWS

ஆலங்குடி ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பாக நடைபெற்றுவரும் பணியை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தார்.

ஆலங்குடி ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பாக  நடைபெற்றுவரும் பணியை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தார்.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஊராட்சி ஒன்றியம் ஆலங்குடி ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பாக ரூ.54.59 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்றுவரும் பள்ளி வகுப்பறை கட்டிடங்கள் மறுசீரமைப்பு பணிகள் மற்றும் புதிய அங்காடி கட்டிடம் கட்டும் பணிகள், சிமெண்ட் சாலை பணிகள்,  ஊராட்சி பதிவேடுகள் ஆய்வு.

 

                                                                                    மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா

100 நாள் வேலைத்திட்டம், பிரதம மந்திரி இலவச வீடு வழங்கும் திட்டத்தின்கீழ் நடைபெற்று வரும் பணிகளை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் இதில் திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் குமரா. வைத்தி. வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வி.கஜேந்திரன், சுமதி, வட்டாட்சியர் கோமதி., ஆலங்குடி ஊராட்சி மன்ற தலைவர் கவிதா வைத்தியநாதன், மண்டல துணை வட்டாட்சியர் சுந்தர், வருவாய் ஆய்வாளர் பாலமுருகன்., கிராம நிர்வாக அலுவலர் மாதவன் ஆகியோர் இந்த ஆய்வின் போது உடன் இருந்தனர்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )