ஈரோடு வெட்டுக்காட்டுவலசு பகுதியை சேர்ந்தவர் வடிவேல்

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு பறக்கும் படை அதிகாரிகளின் சோதனையில் ஈரோட்டை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபரிடம் மூன்று லட்சம் ரூபாய் ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு வெட்டுக்காட்டுவலசு பகுதியை சேர்ந்தவர் வடிவேல் .
ரியல் எஸ்டேட் அதிபரான அவர் இன்று காலை சுமார் 7 மணி அளவில் தனது காரில் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அவரது காரை சோதனையிட்டு காரில் மூன்று லட்சம் ரூபாய் ரொக்கப் பணம் இருந்ததை கண்டறிந்து அதனை பறிமுதல் செய்தனர்.
ரூபாய் 50 ஆயிரத்திற்கு மேல் ரொக்க பணம் எடுத்துச் செல்லக்கூடாது என்பதை மீறி 3 லட்சம் ரூபாய் ரொக்க பணத்தை எடுத்துச் சென்றதால் அவரிடம் இருந்து அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து, தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் வடிவேலிடம் அந்த பணம் எதற்காக கொண்டு செல்லப்பட்டது, உரிய ஆவணங்கள் உள்ளதா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.