உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு.

திருப்பூர் செய்தியாளர R. ரமேஷ்.
திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் அருவிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி மலைக்கு தினசரி ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர் மலையடிவாரத்தில் பிரசித்தி பெற்ற அமணலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வழிபடுவதற்காக ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
விடுமுறை நாட்கள் அமாவாசை, பௌர்ணமி, தினங்களில் திருமூர்த்தி மலையில் கூட்டம் அதிகமாக இருக்கும் இங்கு வரும் சுற்றுலா பயணிகளும் பக்தர்களும் திருமூர்த்தி அணை வண்ண மீன் காட்சியகம் ஆகியவற்றை பார்வையிடுவதோடு பஞ்சலிங்க அருவிக்கும் சென்று குளித்து மகிழ்கின்றனர்.
வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாக அருவியில் தண்ணீர் கொட்டுகிறது. இதனால் பொதுமக்கள் அருவியில் மகிழ்ந்தனர்.
இந்நிலையில் இந்த பகுதியில் இரவு பெய்த கனமழை காரணமாக அருவியில் நீர்வரத்து அதிகரித்தது இதைத் தொடர்ந்து பாதுகாப்பு கருதி பஞ்சலிங்க அருவிக்கு பொதுமக்கள் செல்ல கோவில் நிர்வாகத்தினர் அனுமதிக்கவில்லை அருவிக்கு செல்லும் வழியில் தடுப்பு கம்பி அமைத்து தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து வனத்துறையினர் கூறுகையில் உடுமலை பஞ்சலிங்க அருவியில் நீர்வரத்தை கண்காணித்து வருகிறோம் நீரின் வேகம் குறைந்தால் பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்படும். இல்லாவிட்டால் தொடர்ந்து தடை நீடிக்கும் என தெரிவித்தனர்.