உத்தமபாளையம் வட்ட அளவிலான மக்கள் தொடர்புமுகாம். மாற்றுத்திறனாளிகளுக்காக மேடையிலிருந்து கீழே இறங்கி வந்த ஆட்சியர்.

தேனி மாவட்டம் காமாட்சிபுரத்தில், ஆட்சியர் திருமதி ஆர்.வி.ஷஜிவனா தலைமையில் மக்கள் சந்திப்பு முகாம் நடத்தப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. ஊராட்சி மன்றத் தலைவர் அழகுமுத்து அவர்கள் பயனாளிகளுக்கான நலத்திட்டம் பெற விண்ணப்பங்களைப் பெற்று பரிந்துரைக்கு அனுப்பினார்.
இந்நிகழ்வில், வேளாண்மைத் துறை சார்பாகவும், தோட்டக்கலை சார்பாகவும், மருத்துவத்துறை, பட்டு வளர்ச்சித்துறை, அங்கன்வாடி, குழந்தைகள் வளர்ச்சி மையம், மருத்துவக் காப்பீடு அட்டை பெறுவது எப்படி போன்ற செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா, தையல் இயந்திரம், முதியோர் ஓய்வூதிய உத்தரவு, ஸ்மார்ட் கார்டு, மருத்துவக் காப்பீட்டு அட்டை, சுகாதாரப் பணியாளர்கள் அட்டை, கர்ப்பிணி பெண்களுக்கான காப்பீட்டு உபகரணம் போன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன,
உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் திரு. பால்பாண்டியன்.
வட்டாட்சியர் சந்தி ரசேகர், துணை வட்டாட்சியர் ச.திஸ்குமார் ஆகியோர்கள் பயனானிகளை தேர்வு செய்து ஆட்சியருக்கு பரிந்துரை வழங்கினார்கள். மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்டங்களை அவர்கள் இருக்கும் இடத்திற்கே நேரிடையாகச் சென்று வழங்கினார்.