உளுந்தூர்பேட்டை வழக்கறிஞர் சங்க தலைவர், செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட புதிய பொறுப்பாளர்கள் பதவியேற்பு விழா..!

கள்ளக்குறிச்சி மாவட்டம்; உளுந்தூர்பேட்டை 2023-2024- ம் ஆண்டிற்கான வழக்கறிஞர் சங்கத்தின் தலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் துணை பொறுப்பாளர்கள் தேர்தல் 28/04/2023 இன்று நடைபெற்றது.
இந்த தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர் 27-04-2023- ம் தேதி உளுந்தூர்பேட்டை வழக்கறிஞர் சங்க அலுவலகத்தில் தேர்தல் பொறுப்பாளர்கள் முன்னிலையில் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டு தேர்தல் பொறுப்பாளர்கள் மனுக்களை தேர்வு செய்தனர்.
இதில் தலைவர், செயலாளர், பொருளாளர், துணைத் தலைவர், துணைச் செயலாளர், நூலகம் போன்ற பதிவிகளுக்கு இன்று காலை 10 மணி முதல் 12 வரை தேர்தல் நடைபெற்றதில் தேர்வு செய்யப்பட்ட புதிய வழக்கறிஞர் பொறுப்பாளர்கள் சங்க தலைவர் A.வெங்கடேசன், செயலாளர் J.திலிப், பொருளாளர் V. ஏழுமலை, துணைத் தலைவர் விஜிய பார்த்திபன், துணைச் செயலாளர் ஆகியோர் வெற்றி பெற்று பதவி ஏற்று கொண்டனர்.
