ஒசூர் அருகே வாரிசு சான்றிதழுக்கு பரிந்துரைக்க 4,500 ரூபாய் இலஞ்சம் வாங்கிய விஏஓ, இலஞ்ச ஒழிப்பு போலிசில் சிக்கினார்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த அஞ்செட்டி மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்த மாரியப்பன் என்பவர் கடந்த 1999 ஆம் ஆண்டு உயிரிழந்துள்ளார் அவரது மகன் ஜெயராமன் உள்ளிட்ட வாரிசுக்கள், வாரிசு சான்றிதழ் கேட்டு சாலிவாரம் கிராம நிர்வாக அலுவலருக்கு ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளனர்
வாரிசு சான்றிதழ் சம்பந்தமாக விஏஓ லட்சுமிகாந்த் அவர்களை ஜெயராமன் நேரில் சந்தித்தபோது 6000 ரூபாய் லஞ்சம் கேட்டு முன்பணமாக 1500 ரூபாய் பெற்றுள்ளார்.
மீதம் 4500 ரூபாய் பணம் கொடுத்தால் மட்டுமே வாரிசு சான்றிதழ் வழங்க பரிந்துரைப்பதாக அவர் கூறியதை தொடர்ந்து பணம் கொடுக்க மனம் இல்லாத ஜெயராமன் கிருஷ்ணகிரி லஞ்ச ஒழிப்புத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளார்.
லஞ்சம் ஒழிப்பு போலிசார் வழங்கிய ஆலோசனையின் பெயரில் ரசாயனம் தடவிய நான்காயிரத்து ஐநூறு ரூபாயை விஏஓவிடம் வழங்கிய போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறையினர் கையும் கழுவுமாக பிடித்து கைது செய்தனர்.
நேற்று தான் விஏஓ, வேறு கிராமத்தில் பணியாற்ற கலந்தாய்வில் தேர்வு செய்திருந்த நிலையில், ஒரு வாரத்திற்குள் பணிமாறுதல் செய்ய வேண்டிய நிலையில் லஞ்ச ஒழிப்பு போலிசில் சிக்கி உள்ளார்