BREAKING NEWS

ஒரத்தநாட்டில் குடிசை மாற்று வாரிய வீட்டில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி 6 ஆண்டுகளாக இயங்கி வருகிறது: பள்ளிக்கல்வித்துறை பள்ளி கல்வித்துறை நடவடிக்கை எடுக்குமா..?

ஒரத்தநாட்டில் குடிசை மாற்று வாரிய வீட்டில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி 6 ஆண்டுகளாக இயங்கி வருகிறது: பள்ளிக்கல்வித்துறை பள்ளி கல்வித்துறை நடவடிக்கை எடுக்குமா..?

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் குடிசை மாற்று வாரிய வீட்டில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி 6 ஆண்டுகளாக இயங்கி வருகிறது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் பொறுப்பு மாவட்டமான தஞ்சையில் ஒட்டுமொத்த வீடுகளுக்கான மின் இணைப்பு பாக்ஸுகளுக்கு அருகில் மாணவ மாணவிகள் அமர்ந்து படிக்கும் ஆபத்தான நிலை நீடிக்கிறது.

 

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அண்ணா நகர் பகுதியில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு அமைந்துள்ளது இந்த குடியிருப்பில் 179 ஆவது நம்பர் வீட்டில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. 

 

 

ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை 48 மாணவர்கள் படித்து வரும் இந்த பள்ளி ஈராசிரியர் பள்ளியாக செயல்பட்டு வருகிறது தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பின் மகேஷ் பொய்யாமொழி பொறுப்பு அமைச்சராக உள்ள தஞ்சை மாவட்டத்தில் இந்த பள்ளி கடந்த ஆறு ஆண்டுகளாக குடிசை மாற்று வாரிய வீட்டில் இயங்கி வரும் அவல நிலையில் உள்ளது.

 

 

பக்கத்தில் எதிரில் மக்கள் குடியிருக்கும் நிலையில் விளையாட்டு திடலோ எந்தவித வசதியும் இல்லாமல் 48 மாணவிகள் படித்து வருகின்றனர் அதுவும் குடிசை மாற்று வாரியத்தின் ஒட்டுமொத்த வீடுகளுக்கான மின் இணைப்பு உள்ள பகுதியில் மாணவ மாணவிகள் ஆபத்தான நிலையில் அமர்ந்து படித்து வருகின்றனர்.

 

 

2004 ஆம் ஆண்டு ஜூலை 16ஆம் தேதி கும்பகோணம் காசிராமன் தெருவில் பள்ளி தீ விபத்தில் 94 குழந்தைகள் உயிரிழந்தும் இது போன்ற அவலம் தஞ்சை மாவட்டத்திலேயே நீடிக்கிறது மின்சார மீட்டர் பாக்ஸ் அருகிலேயே மாணவ மாணவிகள் ஆபத்தான நிலையில் படித்து வருவதால் பெற்றோர்கள் தினமும் பயத்துடன் மாணவ மாணவிகளை பள்ளிக்கு அனுப்பி வருகிறார்கள்.

 

 

எனவே அருகில் உள்ள இடத்தில் புதியதாக பள்ளி கட்டிடம் கட்டி மாணவ மாணவிகளுக்கு விடியலை இந்த அரசு தர வேண்டும் என்பது பெற்றோர்களின் கோரிக்கையாக உள்ளது.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )