கடலூர் அருகே எடப்பாடி பழனிச்சாமிக்கு கட்சியினர் உற்சாக வரவேற்பு.!

– கடலூர் மாவட்ட செய்தியாளர் – கொ.விஜய்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் நலம் விசாரித்துவிட்டு கடலூர் மாவட்டம் வேப்பூர் வழியாக சேலம் சென்ற தமிழக முன்னாள் முதலமைச்சர் அஇஅதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்களுக்கு,..
வேப்பூர் நான்கு முனை சந்திப்பில் நல்லூர் வடக்கு ஒன்றிய செயலாளர் பச்சமுத்து தலைமையில் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மேற்கு மாவட்ட செயலாளர் புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் அருண்மொழித்தேவன், கழக அமைப்புச் செயலாளர் எம் எல் ஏ முருகுமாரன்,
மேற்கு மாவட்ட அவை தலைவர் தங்கராசன் மற்றும் கட்சியினர் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு ஆஇஅதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
CATEGORIES கடலூர்
TAGS அதிமுகஅரசியல்கடலூர் வேப்பூர்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை எடப்பாடி கே.பழனிசாமி ஆய்வுமுக்கிய செய்திகள்