கடலூர் அருகே போலி மருத்துவர் கைது.

-கடலூர் மாவட்ட செய்தியாளர் கொ.விஜய்.
கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள ஆவட்டி கூட்டு ரோட்டில் போலி மருத்துவமனை நடைபெறுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில்,..
திட்டக்குடி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் சோபானந்தம் மற்றும் ராமநத்தம் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் கோபிநாத் இருவரும் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவர் வேப்பூர் அடுத்துள்ள ஆவட்டி கூட்ரோட்டில் கடந்த எட்டு ஆண்டுகளாக வாடகைக்கு வீடு எடுத்து அதில் மருத்துவம் பார்த்து வந்தது தெரியவந்தது.
வீட்டில் உள்ள அறைகளில் ஏராளமான மருந்து மாத்திரைகள் பதுக்கி வைத்திருந்ததை கைப்பற்றினர் பின்னர் போலி மருத்துவர் சுரேஷ் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து கையும் களவுமாக கைது செய்தனர்.
CATEGORIES கடலூர்
TAGS ஆவட்டி கூட்டு ரோட்டில் போலி மருத்துவமனைகடலூர் அருகே போலி மருத்துவர் கைதுகடலூர் வேப்பூர்குற்றம்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்முக்கிய செய்திகள்
