BREAKING NEWS

கபிஸ்தலம் அருகே அனுமதி இன்றி வெடிமருந்து வைத்திருந்த 3-நபர்கள் கைது.

கபிஸ்தலம் அருகே அனுமதி இன்றி வெடிமருந்து வைத்திருந்த 3-நபர்கள் கைது.

வெடி பொருட்கள் பறிமுதல் செய்த போலீசார்..

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா கபிஸ்தலம் அருகே எருமைப் பட்டி கிராமத்தில் தேவகி பையர் ஒர்க்ஸ் இயங்கி வருகிறது. இதை சண்முகம் என்பவர் நடத்தி வருகிறார். சண்முகம் சோழங்கநத்தம் பகுதியில் அமைந்துள்ள, தனது வீட்டில் அனுமதி இன்றி வெடி தயாரிக்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததின் பேரில், கபிஸ்தலம் காவல் ஆய்வாளர் மகாலட்சுமி தலைமையில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவரது வீட்டில் இரண்டு கிலோ அலுமினிய பவுடர், இரண்டு கிலோ சல்பர், ஆறு கிலோ பொட்டாசியம் நைட்ரேட் ஆகிய எரிபொருள்களை கைப்பற்றிய போலீசார், அரசு அனுமதியின்றி வெடிபொருள் தயாரிப்பில் ஈடுபட்டிருந்த சோழங்கநத்தம் பகுதியை சேர்ந்த தேவகி பயர் ஒர்க்ஸ் உரிமையாளர் சண்முகம் (62), எருமைப்பட்டி பொன்பேத்தியை சேர்ந்த மணிமாறன் (17) மற்றும் வலங்கைமான் புங்கஞ்சேரியை பகுதியில் வசிக்கும் தமிழ்வாணன் (29) ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

CATEGORIES
TAGS