BREAKING NEWS

கலவை அருகே கருப்பு ஆடையை உடுத்தி காட்டேரிக்கு இரவில் நடத்திய வினோத திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

கலவை அருகே கருப்பு ஆடையை உடுத்தி காட்டேரிக்கு இரவில் நடத்திய வினோத திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

கலவை அருகே கருப்பு ஆடையை உடுத்தி காட்டேரிக்கு இரவில் நடத்திய வினோத திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

ஆயிரத்துக்கு மேற்பட்டு பிடித்து வைத்த காட்டேரியம்மன் மண் உடலில் பூசினால் நோய் தீரும் அதிசயம்..

ராணிப்பேட்டை மாவட்டம், கலவை அருகே உள்ள பென்னகர் கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீ காட்டேரியம்மனுக்கு கருப்பாடை உடுத்தி மஞ்சள், குங்கும் வைத்து வெகு விமரிசையாக வினோத திருவிழா நடைபெற்றது..

இத்திருவிழாவானது உலக நன்மைக்காவும், பொதுமக்கள், கால்நடைகள், நோய்நொடியின்றி வாழவும், விவசாயம் செழிக்கவும், மழை வேண்டியும் பல ஆண்டுகளாக இத் திருவிழா நடைபெற்று வருகிறது.

சுமார் 500 வருடங்களுக்கு முன் ஊரில் பலருக்கு நோய்வாய்ப்பட்டு இறந்து உள்ளனர். அப்பொழுது காட்டேரியம்மனுக்கு கலி மண்ணால் உருவம் பிடித்து மஞ்சள், குங்குமம் வைத்து திருவிழா செய்து வழிபட்டதோடு அம் மண்ணை கொண்டு உடலில் பூசி வர அனைவருக்கும் நோய் குணமடைந்ததாக தெரிகிறது. இதனால் தோன்றுதொட்டு இத்திருவிழா நடைபெற்று வருகிறது..

முன்னதாக ஊர் பொதுமக்கள் தங்கள் நிலத்தில் விளைந்த தானியங்களை முதல் காணிக்கையாக எடுத்து வைத்த தானியம் கொண்டு பொங்கல் வைத்து படையல் செய்து, கோழி, ஆடு ஆகியவை பலியிட்டு வழிபாடு செய்தனர்.

தொடர்ந்து பம்பை உடுக்கை மூலம் பாடல் பாடி வழிபட்டபோது ஆக்ரோசமாக பெண்களின் மீது வந்த காட்டேரியம்மன் ஊரையும் மக்களையும் கட்டிகாப்பேன் என வாக்குறுதியும் கொடுத்தது.

இத்திருவிழாவில் பென்னகர் சுற்றியுள்ள மாம்பாக்கம், வேம்பி, தோனிமேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொது மக்கள் கலந்துக்கொண்டு சாமி தரிசனம் செய்தனர்

CATEGORIES
TAGS