BREAKING NEWS

கலவை பேரூராட்சியில் ஒட்டுமொத்த தூய்மை பணி சிறப்பு முகாம் உறுதிமொழி ஏற்பு.

கலவை பேரூராட்சியில் ஒட்டுமொத்த தூய்மை பணி சிறப்பு முகாம் உறுதிமொழி ஏற்பு.

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை பேரூராட்சியில் 15 வார்டுகளில் உள்ள வீடுகளில் தினசரி காலை தூய்மை பணியாளர்கள் மற்றும் வாழைப்பந்தல் சாலையில் திடக்கழிவு மேலாண்மை கிடங்கில் மக்கும் குப்பை மக்காத குப்பை  தரம் பிரித்து இயற்கை உரம் தயாரித்து வருகின்றனர்.

 

இந்நிலையில் செயல் அலுவலர் பொறுப்பு சரவணன், உத்தரவின்பேரில் தூய்மை பணி மேற்பார்வையல் அரங்கநாதன், தலைமையில். பேரூராட்சி பரப்புரையாளர்கள் குமுதா, லதா, ஆகியோர் தூய்மை பணியாளர்களுடன் குழுவாக சென்று ஒட்டு மொத்த தூய்மை பணி முகாம் இன்று நடைபெற்றது.

 

அப்போது வீடு வீடாக சென்று, மக்கும் குப்பை மக்காத குப்பை தரம் பிரித்து வாங்குவோம்,நம்ம பேரூராட்சி தூய்மையான பேரூராட்சி, பொது மக்களிடம் அன்பாக பேசுவோம் உள்ளிட்ட வாசகங்கள் கூறி உறுதி மொழியை ஏற்றனர். இதில் தூய்மை பணியாளர்கள், டெங்கு பணியாளர்கள், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Share this…

CATEGORIES
TAGS