கள்ளக்காதல் பிரச்சனையால் வேடசந்தூரில் பைனான்சியரை பாட்டிலால் குத்தி கொன்ற வாலிபர் கைது.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகில் உள்ள தேவநாயக்கன்பட்டியை சேர்ந்த சின்னக்காளை மகன் காளிதாஸ்(28) என்பவரை கள்ளக்காதல் பிரச்சனையால் கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகில் உள்ள காட்டு மன்னார்கோவில் தெருவை சேர்ந்த கணேசன்(30) மதுபாட்டிலை எடுத்து காளிதாசின் கழுத்தில் குத்தினார்.
இதில் ரத்த வெள்ளத்தில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து வேடசந்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த கணேசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
CATEGORIES குற்றம்
TAGS கள்ளக்காதல்கள்ளக்காதல் பிரச்சனைகாட்டு மன்னார்கோவில்குற்றம்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்திண்டுக்கல் மாவட்டம்தேவநாயக்கன்பட்டிமதுபாட்டில்முக்கிய செய்திகள்வேடசந்தூர்