காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் வீட்டுமனை பட்டா கேட்டு கோரிக்கை மனு.மாவட்ட வருவாய் அலுவலரிடம் வழங்கினார்கள்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் வசிக்கும் மாற்றுத் திறனாளிகள், மத்திய மாநில அரசுகளின் நலத்திட்ட உதவிகளை காஞ்சிபுரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மூலம் பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் வசிக்கும் 300க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேரில் வந்து மாற்று திறனாளிகளான தங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கிட வேண்டும் என கோரிக்கை விடுத்து மனு அளித்தனர்.
மாற்றுத்திறனாளிகள் வழங்கிய கோரிக்கை மனுக்களை காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் சிவருத்ரய்யா நேரில் அவர்களிடத்திற்கே வந்து பெற்றுச் சென்றார்.
ஒரே நேரத்தில் ஏராளமான மாற்றுத் திறனாளிகள் கூடியதால் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
CATEGORIES காஞ்சிபுரம்