காரைக்குடி அருகே கண்மாயில் விதிகளை மீறி கிராவல் மண் அள்ளப்படுவதாக புகார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சங்கராபுரம் ஊராட்சி பகுதியில் ஒ.சிறுவயல் சாலையில் 116 ஏக்கரில சங்கு சமுத்திரகண்மாய் ஏந்தல் கண்மாய் பகுதியில் மேலூரில் இருந்து காரைக்குடி நான்குவழிச்சாலை பணிக்காக சங்கு சமுத்திர கண்மாயில் கிராவல் மண் அள்ள வருவாய்த்துறை அதிகாரிகள் அனுமதி அளித்துள்ளனர்.
ஆனால் விதிமுறையை மீறி அளவுக்கு அதிகமாக கிராவல் மண் அள்ளப்பட்டு வருவதோடு, அவற்றை வெளிச்சந்தையிலும் விற்பனை செய்வதாக புகார் எழுந்துள்ளது. இக்கண்மாயின் நீர்பிடிப்பு பகுதி அருகில் ஆவின் நிறுவனம், பழங்குடியினர் (நறிகுறவர்) குடியிறுப்பு உள்ளது.
தற்போது 900 வீடுகள் கொண்ட குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிறுப்பு கட்டப்பட்டு வரும் நிலையில் அந்தப் பகுதியில் விதிமீறி கனரக இயந்திங்கள் மூலம் அதிகமான ஆழம் தோண்டப்பட்டு கிராவல் மண்வெட்டப்பட்டு 100 க்கும் மேற்பட்ட லாரிகளில் பகல் இரவு முழுவதும் அள்ளி செல்கின்றனர்.
இக் கண்மாயின் அருகில் சுமார் 200 மீட்டர் தொலைவில் குடியிருப்பு வாரியம் சார்பில் கட்டப்பட்டுவரும் 900 க்கு வீடுகளுக்கு விதிகளை மீறி கிராவல் மண் அள்ளுவதால் ரமணா பட பாணியில் அடுக்குமாடி குடியிருப்புகள் சேதமடைத்து விபத்து ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது.
கனிமவளத் துறை, நீர்வளத்துறை, அனுமதியுடன் அற்றப்பட்டாலும் விதிமுறைகளை மீறி கண்மாய் ஆழப்படுத்தப்படுவதையோ, இதனால் அருகில் கட்டப்பட்டு வரும் குடியிறுப்புக்கு ஏற்படும் ஆபத்தை பற்றியோ, கரையின் தென்பகுதியில் உள்ள வீட்டு மனைகளையோ எந்தவித ஆய்வும் செய்யாமல் அரசு அதிகாரிகள் மெத்தனமாக உள்ளனர்.
ஏற்கனவே கடந்த ஆட்சியில் பழங்குடியினர் குடியிருப்பு பகுதியில் மண் அள்ளிய போது தங்களுக்கும் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இல்லை என போராடியதால் மண் அள்ளியது நிறுத்தப்பட்டது.