குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி

குற்றால மெயின் அருவி ஐந்தருவில் மூன்று நாளைக்கு பிறகு அருவியில் குளிக்க தடை நீக்க சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்
தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்த தொடர் கனமழையால் குற்றாலம் மெயின் அருவி ஐந்தருவியில் கடந்த மூன்று நாட்களாக தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது இதனால் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிப்பதற்கு போலீசார் தற்காலிகமாக தடை விதித்த நிலையில் அருவி குளிக்க முடியாமால் ஏமாற்றம் அடைந்தனர்.
இந்த நிலையில் இன்று காலை முதல் தண்ணீர் வரத்து குறைந்தது அடுத்து மீண்டும் அருவியில் குளிப்பதற்கு தடை நீக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் உற்சாகமடைந்து ஆனந்த குளியலிட்டு செல்கின்றன.
இதே போல பழைய குற்றாலம், புலியருவி, சிற்றருவிகளில் மிதமான தண்ணீர்வரத்து உள்ளதால் உற்சாகமாக சுற்றுலா பயணிகள் தற்போது அனைத்து அருவிகளிலும் குளித்து மகிழ்ந்து செல்கின்றன..