BREAKING NEWS

கோவில்பட்டி அருகே சந்திரா மெட்ரிகுலேஷன் பள்ளி இரண்டாம் ஆண்டு துவக்க விழா!, சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு பரிசுகள் வழங்கினார்.

கோவில்பட்டி அருகே சந்திரா மெட்ரிகுலேஷன் பள்ளி இரண்டாம் ஆண்டு துவக்க விழா!, சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு பரிசுகள் வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே ஓட்டப்பிடாரத்தில் உள்ள சந்திரா மெட்ரிகுலேஷன் பள்ளி இரண்டாம் ஆண்டு துவக்க விழா மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

 

 

சந்திரா மெட்ரிகுலேஷன் பள்ளி நிறுவனர் ஓட்டப்பிடாரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மோகன் தலைமையில் முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு மாணவ மாணவிகள் கலை நிகழ்ச்சியை தொடங்கி வைத்து சிறைப்புரையாற்றி மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார்.

 

 

இவ்விழாவில் விளாத்திகுளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன், மாவட்ட கவுன்சிலர் பேச்சியம்மாள், ஒன்றிய செயலாளர்கள் வண்டானம் கருப்பசாமி, அன்புராஜ், நகர மன்ற உறுப்பினர்கள் கவியரசன், செண்பகமூர்த்தி, அம்மா பேரவை ஒன்றிய செயலாளர் சாமிராஜ், நகர அம்மா பேரவை செயலாளர் ஆபிரகாம் அய்யாதுரை, முன்னாள் ஒட்டப்பிடாரம் செயலாளர் போடு சாமி, அதிமுக நிர்வாகிகள் கண்ணன், பழனி குமார், முருகன், உள்ளிட்ட மாணவ மாணவிகள் பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர்.

கோவில்பட்டி செய்தியாளர். அ.சிவராமலிங்கம்

CATEGORIES
TAGS