கோவில்பட்டி அருகே வடக்கு இலந்தைகுளம் கிராமத்தில் விவசாயி வெட்டிபடுகொலை.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கயத்தார் உள்ள வடக்கு இலந்தைகுளம் கிராமம் தண்ணீர் கிணற்று தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் மாரியப்பன் (எ) கோடாங்கி மாரியப்பன் (52). விவசாயி. மாலை ஊருக்கு வடக்கேயுள்ள தனது தோட்டத்திற்க்கு சென்றார்.
அப்போது மறைந்து நின்ற கும்பல் மாரியப்பனை சரமாரி வெட்டிபடுகொலை செய்துவிட்டு தப்பியோடிவிட்டனர். தகவலறிந்து கயத்தாறு காவல் நிலைய ஆய்வாளர் முத்து மற்றும் போலீசார் விரைந்து வந்தனர்.
கோவில்பட்டி டி.எஸ்.பி.வெங்கடேஷ் சம்பவ இடத்திற்க்கு நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தி, மாரியப்பன் உடலை பிரேத பரிசோதனைக்கு பாளை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். இது குறித்து கயத்தார் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் கொலைச் சம்பவம் தொடர்பாக மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். இதனால் பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது.