கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் இடியுடன் கூடிய கனமழை ஒரு மணி நேரத்திற்கு கொட்டித் தீர்த்த மழையால் சாலையில் பெருக்கெடுத்து ஓடிய மழை நீர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்த நிலையில் பிற்பகலில் மேகமூட்டத்துடன் காணப்பட்டு மாலையில் லேசான குளிர்ந்த காற்று வீசியது பின்னர் திடீரென இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்த மழை ஒரு மணி நேரத்துக்கு மேலாக நீடித்தது மழையால் இதனால் சாலையில் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது இதேபோல் கோவில்பட்டி அருகே கயத்தாறு, கழுகுமலை, நாலாட்டின்புத்தூர், வானரமுட்டி, மணியாச்சி சுற்று வட்டார பகுதிகளிலும் கனமழை மழை பெய்தது மழையின் காரணமாக நீண்ட நாட்களாக வாட்டி எடுத்த வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ந்த சூழல் உருவானது இதனால் பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

CATEGORIES தூத்துக்குடி
