BREAKING NEWS

கோவில்பட்டியில் பல்வேறு கட்சியில் இருந்து விலகி கடம்பூர் ராஜூ முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்

கோவில்பட்டியில் பல்வேறு கட்சியில் இருந்து விலகி கடம்பூர் ராஜூ முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கயத்தாறு ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட காமநாயக்கன்பட்டியில் இருந்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திலிருந்து மற்றும் பல்வேறு கட்சியில் இருந்து விலகி…

30-க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் கயத்தார் கிழக்கு ஒன்றிய செயலாளர் வண்டானம் கருப்பசாமி தலைமையில் முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ முன்னிலையில் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு தலைவி சத்யா, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பழனிசாமி, ஒன்றிய செயலாளர் அன்புராஜ், நகர மன்ற உறுப்பினர் கவியரசன், மாவட்ட மாணவர் அணி துணைத் தலைவர் செல்வகுமார்,முன்னாள் ஒன்றிய செயலாளர் போடு சாமி, அழகர்சாமி, முருகன், கோபி, பழனி குமார், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Share this…

CATEGORIES
TAGS