சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூபாய் 15.30 லட்சம் மதிப்பில் கோவில்பட்டி அருகே புதிதாக சிமெண்ட் சாலையை கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.
சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூபாய் 15.30 லட்சம் மதிப்பில் கோவில்பட்டி அருகே புதிதாக சிமெண்ட் சாலையை கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கயத்தார் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட நொச்சிகுளம் கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 15.30 லட்சம் மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்ட சிமெண்ட் சாலையை மக்கள் பயன்பாட்டுக்கு முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு புதிதாக அமைக்கப்பட்ட சிமெண்ட் சாலையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.
நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் வண்டானம் கருப்பசாமி, மாவட்ட அம்மா பேரவை செயலாளர் செல்வகுமார், மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் நீலகண்டன்,அம்மா பேரவை நகர செயலாளர் மோகன்,
கடம்பூர் நகர செயலாளர் வாசமுத்து, ஒன்றிய மாணவர் அணி செயலாளர் நவநீதகிருஷ்ணன், இலக்கிய அணி இணை செயலாளர் பால கணேஷ்,
பன்னீர் குளம் கிளைச் செயலாளர் முத்துப்பாண்டி, நொச்சிகுளம் கிளைச் செயலாளர் காளியப்பன், முன்னாள் வார்டு கவுன்சிலர் சசிகுமார்,அம்மா அதிமுக நிர்வாகிகள் கோபி, முருகன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.